
மாநாட்டு திடலுக்கு முன்கூட்டியே வருகிறார் விஜய்
மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாடு 3 மணிக்கே தொடங்க உள்ளதாகவும், இரவு 7 மணிக்குள் மாநாட்டை முடித்து தொண்டர்களை பாதுகாப்பாக அனுப்பிவைக்க அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக மாநாட்டை 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளதால், தற்போது மாநாட்டை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சரியாக மூன்று மணிக்கு மாநாடு திடலுக்கு விஜய் வருவார் என தகவல் வெளியாகி உள்ளது. 3 மணிக்கு வருகை தரும் விஜய், அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக் வர திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story






