இந்தியா அதிரடி தாக்குதல்: பாகிஸ்தானில் 8 பேர் பலி


இந்தியா அதிரடி தாக்குதல்: பாகிஸ்தானில் 8 பேர் பலி
x
தினத்தந்தி 7 May 2025 3:34 AM IST (Updated: 7 May 2025 5:36 AM IST)
t-max-icont-min-icon

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

டெல்லி,

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.44 மணியளவில் இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஏவப்பட்டன.

மொத்தம் 9 இடங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டனர். அதேவேளை, இந்தியா நடத்திய இந்த அதிரடி ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 35 பேர் படுகாயமடைந்தனர்.

1 More update

Next Story