மும்பை விமான நிலையத்தில் ரூ.45 கோடி போதைப்பொருள், தங்கம் பறிமுதல்


மும்பை விமான நிலையத்தில் ரூ.45 கோடி போதைப்பொருள், தங்கம் பறிமுதல்
x

கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் ₹45 கோடி போதைப்பொருள், தங்கம் மற்றும் வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். 12 பேர் கைதாகினர். பாங்காக்கில் இருந்து பல்வேறு விமானங்களில் புளி பாக்கெட்டுகளுக்கு இடையில் மறைத்து கடத்தப்பட்ட ₹37¼ கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாங்காக்கில் இருந்து வந்த 2 பயணிகளிடம் இருந்து கடத்தப்பட்ட ₹6 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம், மற்றொரு நபரிடம் இருந்து ₹88 லட்சம் மதிப்புள்ள கடத்தல் வைரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தல் வலையமைப்புகள் குறித்து கண்டறிய சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story