புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்
x

புதுச்சேரியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் வழுதாவூர் ரோட்டில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக முத்திரையர்பாளையம் காமராஜர் வீதியை சேர்ந்த வடிவேல் (வயது 56) என்பவரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் லாஸ்பேட்டையில் புகையிலை பொருட்களை விற்றதாக நேருவில் நகரை சேர்ந்த பாலசந்திரன் (44) என்பவரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர்.


Next Story