மதுகுடித்த தொழிலாளி சாவு


மதுகுடித்த தொழிலாளி சாவு
x

புதுவையில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்த தொழிலாளி உயிரிழந்தார்.

புதுச்சேரி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). கூலித்தொழிலாளி. நேற்று அவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து விட்டு வீட்டில் படுத்திருந்தார். அவரது தங்கை பார்வதி எழுப்பிய போது சுயநினைவு இன்றி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story