மதுகுடித்த தொழிலாளி சாவு

புதுவையில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்த தொழிலாளி உயிரிழந்தார்.
புதுச்சேரி
புதுச்சேரி தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). கூலித்தொழிலாளி. நேற்று அவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து விட்டு வீட்டில் படுத்திருந்தார். அவரது தங்கை பார்வதி எழுப்பிய போது சுயநினைவு இன்றி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





