மகளை கத்தியால் வெட்டிய தந்தை கைது


மகளை கத்தியால் வெட்டிய தந்தை கைது
x

குடும்ப தகராறில் மகளை கத்தியால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார்.

கோட்டுச்சேரி

குடும்ப தகராறில் மகளை கத்தியால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார்.

மகளுடன் தகராறு

திருவேட்டக்குடி மாரியம்மன் கோவில் வடக்கு வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 53). இவருக்கு மீரா (27), பிரியா (24) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மாரிமுத்து பிரியா வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார். இதுபற்றி பிரியா, மீராவுக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். இதன்பின் அவர்கள் இருவரும் தந்தையிடம் சென்று இதுகுறித்து கேட்டுள்ளனர்.

கொலை மிரட்டல்

அப்போது மாரிமுத்து, நான் அப்படித்தான் பேசுவேன், எதற்காக இங்கு வந்தீர்கள் என்று கூறிக்கொண்டே, கத்தியால் மீராவை வெட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. காயமடைந்த மீரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றார்.

இதுதொடர்பாக கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.


Next Story