ரோட்டில் தவறி விழுந்த மீனவர் சாவு
அரியாங்குப்பம் அருகே ரோட்டில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்தார்.
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு முருகன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜி (வயது 37). மீனவர். இவரது மனைவி சக்திகலா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சம்பவத்தன்று ராஜி ரோட்டில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story