புதுச்சேரி: பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு போலீசார் அளித்த விருந்து

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வாழை இலையுடன் போலீசார் விருந்தளித்தனர்.
புதுச்சேரி,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6-ந்தேதி வெளியானது. இதில் ஒரு அரசு பள்ளி உள்பட 55 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் திருப்புவனை காவல் நிலையத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு போலீசார் சால்வை அணிவித்து கவுரவித்தனர். பின்னர் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு வாழை இலையுடன் போலீசார் விருந்தளித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





