புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புதுவையில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே முத்தியால்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக கடையின் உரிமையாளரான பெர்னாண்டஸ் (வயது 47) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,000 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story