35 இந்திய மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை நடவடிக்கை


35 இந்திய மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Nov 2025 8:01 AM IST (Updated: 3 Nov 2025 1:16 PM IST)
t-max-icont-min-icon

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர்.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என கூறி மீனவர்கள் 35 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 3 விசைப்படகுகள், ஒரு நாட்டுப்படகு ஆகியவற்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். நாட்டுப்படகில் இருந்த 4 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் இருந்த 31 பேர் என மொத்தம் 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர்.

அவர்கள் தமிழகத்தின் நாகை மாவட்டம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம். இதன்பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

ஆனால், அவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டி அடித்தனர். இதனால் ராமேசுவரம் மீனவர்கள் நேற்று குறைந்த அளவிலான மீன்களுடன் கரைக்கு திரும்பினர். பெரும்பாலான படகுகளில் எதிர்பார்த்த அளவு மீன்கள் இல்லாததால் அதிக நஷ்டம் ஏற்பட்டது என மீனவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

1 More update

Next Story