கனமழை எச்சரிக்கை: கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


கனமழை எச்சரிக்கை: கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 26 Jun 2025 6:59 AM IST (Updated: 26 Jun 2025 7:03 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோவை,

கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (வியாழக்கிழமை) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுகிறது என கலெக்டர் அறிவித்து உள்ளார்.

1 More update

Next Story