தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை


தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த முதியவரை குடும்ப பிரச்சினை காரணமாக 2 பேர் கொலை செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஆண்டி(எ) மட்டி மகன் முனியசாமி (வயது 70) என்பவரை கடந்த 17.6.2022 அன்று, திரேஸ்புரம் பகுதியில் வைத்து குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில் அவரது உறவினரான திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் சின்னத்தம்பி(32) மற்றும் சின்னதம்பியின் நண்பரான கலைஞர்நகர் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் கருப்பசாமி(24) ஆகிய 2 பேரை வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று (9.9.2025) குற்றவாளிகளான சின்னத்தம்பி, கருப்பசாமி ஆகிய 2 பேருக்கும் தலா ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபி சுஜின்ஜோஸ், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானபிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் சிலம்பரசன் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 18 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story