தூத்துக்குடி: கோவில் பூசாரி கொலை வழக்கில் 4 பேர் கைது


தூத்துக்குடி: கோவில் பூசாரி கொலை வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2025 12:38 PM IST (Updated: 15 Oct 2025 12:40 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த செல்லதுரை மகன் முருகேசன் (வயது 54). இவர் காயல்பட்டினம் பைபாஸ் ரோட்டில் உள்ள சுடலைமாடசாமி கோவிலில் பூசாரியாக உள்ளார். நேற்று மாலை இவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவில் பூசாரி முருகேசன் கொலை தொடர்பாக ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்த இசக்கிபாண்டி மகன் இசக்கிமுத்து(26), மாரிமுத்து மகன் மாரிசெல்வம்(28), செல்வராஜ் மகன் சுகுமார்(26), மேலஆத்தூர் கொழுவை நல்லூரை சேர்ந்த பெருமாள் மகன் சங்கர்(எ) சங்கரவேல்(54) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story