தூத்துக்குடி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.12 ஆயிரம் அபராதம்

தூத்துக்குடியில் 6 சிறுமிகளிடம் பாலியல் செய்கை செய்த நபரை கழுகுமலை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு 6 சிறுமிகளிடம் பாலியல் செய்கை செய்த வழக்கில் கழுகுமலை பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் ஏசுராஜ் (வயது 54) என்பவரை கழுகுமலை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா நேற்று குற்றவாளியான ஏசுராஜ் என்பவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.12,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கழுகுமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கஸ்தூரி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு சேதுராஜன் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.






