நெல்லையில் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

சீதபற்பநல்லூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 20 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக முருகன் வைத்திருந்தது தெரியவந்தது.
நெல்லை மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சையத் நிஷார் அகமது தலைமையிலான காவல் துறையினர் நேற்று (30.04.2025) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காங்கேயன்குளம் விலக்கு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வெள்ளான்குளம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 27) என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 20 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், முருகனை சீதபற்பநல்லூர் காவல் நிலையம் அழைத்து சென்றார். இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முருகனை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 20 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.






