ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் - இளம்பெண் பலி

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 417வது நாளாக போர் நீடித்து வருகிறது.
ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் - இளம்பெண் பலி
Published on

மாஸ்கோ,

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 417வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனாலும் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரஷியாவின் வோரோனேஜ் நகரை குறிவைத்து உக்ரைன் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலில் இளம்பெண் உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com