அ.தி.மு.க - தே.மு.தி.க. ராசியான கூட்டணி - பிரேமலதா


அ.தி.மு.க - தே.மு.தி.க. ராசியான கூட்டணி - பிரேமலதா
x

அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் 2024-க்கான அ.தி.மு.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தே.மு.தி.க.வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.நீண்ட நாட்களாக கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. - அ.தி.மு.க. இடையே பேச்சுவார்த்தை நீடித்துவந்த நிலையில், இன்று அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அ.தி.மு.க. கூட்டணியில் திருவள்ளூர் (தனி) , மத்திய சென்னை , கடலூர், விருதுநகர் , தஞ்சாவூர், ஆகிய 5 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது.

இந்நிலையில் அ.தி.மு.க., தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது. தொகுதி ஓதுக்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது ,

தே.மு.தி.க. நிர்வாகிகள் அனைவரின் விருப்பமும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான். அ.தி.மு.க. - தே.மு.தி.க.கூட்டணி ராசியான கூட்டணி.அ.தி.மு.க தலைமையிலான மாபெரும் கூட்டணி பல போட்டிகள், சவால்களை கடந்து மிகப் பெரிய வெற்றியை பெரும்.2011-ம் ஆண்டு போல மீண்டும் வரலாறு படைப்போம். என தெரிவித்தார்.


Next Story