இந்தியாவை உடைக்க வடக்கு-தெற்கு பிரிவினையை காங்கிரஸ் உருவாக்குகிறது - அமித்ஷா


இந்தியாவை உடைக்க வடக்கு-தெற்கு பிரிவினையை காங்கிரஸ் உருவாக்குகிறது - அமித்ஷா
x

கோப்புப்படம்

தினத்தந்தி 10 April 2024 11:42 PM GMT (Updated: 11 April 2024 6:06 AM GMT)

பிரிவினை சக்திகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க மக்கள் தயாராகி விட்டதாக அமித்ஷா தெரிவித்தார்.

கயா,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பீகார் மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியையும், இந்தியா கூட்டணியையும் அவர் கடுமையாக சாடினார்.

கயா மாவட்டத்தின் குராரு பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதாதளமும் திருப்திபடுத்தும் அரசியலில் ஈடுபட்டு உள்ளன. அதனால்தான் காங்கிரசுக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து வருகின்றன. இந்தியாவை உடைக்க வடக்கு-தெற்கு பிரிவினையை காங்கிரஸ் கட்சி உருவாக்குகிறது. அதன் தலைவர் ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் மவுனம் சாதிக்கிறார்.

ஆனால் காங்கிரசின் இந்த திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணியும், நாட்டு மக்களும் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

இத்தகைய பிரிவினை சக்திகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400-க்கு மேற்பட்ட இடங்களை உறுதி செய்வார்கள்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை காங்கிரஸ் ஒருபோதும் விரும்பவில்லை. பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா வழங்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை" என்று அமித்ஷா கூறினார்.


Next Story