மக்களவை தேர்தல்: 9 பேர் கொண்ட 10-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.


மக்களவை தேர்தல்: 9 பேர் கொண்ட 10-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.
x

மக்களவை தேர்தலை முன்னிட்டு 9 பேர் கொண்ட 10-வது வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பல்வேறு மாநிலங்களில் தங்கள் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பா.ஜ.க. சார்பில் 10-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் உள்ள 9 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் 8 புதிய வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக மேற்கு வங்காளத்தின் அசன்சால் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் பவன் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள பட்டியலின்படி, அசன்சால் தொகுதியில் பவன் சிங்கிற்கு பதிலாக எஸ்.எஸ்.அலுவாலியா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர் தொகுதி எம்.பி. கிரான் கேருக்கு பதிலாக இந்த முறை சஞ்சய் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் காசிபூர் தொகுதியில் பரஸ்நாத் ராய், மெய்ன்புரி தொகுதியில் ஜெய்வீர் சிங், கவுஷம்பி தொகுதியில் வினோத் சோன்கர் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story