நாடாளுமன்ற தேர்தல்: மேலும் 6 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்


நாடாளுமன்ற தேர்தல்: மேலும் 6 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்
x

கோப்புப்படம்  

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு மத்தியபிரதேசம், கோவா மாநிலங்கள் மற்றும் தாத்ரா-நாகர்ஹவேலியை உள்ளடக்கிய 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது-

வடக்கு கோவா-ரமாகாந்த் கலாப், தெற்கு கோவா-கேப்டன் விரியாடோ பெர்னாண்டஸ், மத்தியபிரதேசம் மொரீனா- சத்யபால் சிங் சிகார்வார், குவாலியர்- பிரவீன் பதக், கந்த்வா- நரேந்திர படேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தாத்ரா-நாகர்ஹவேலியில் அஜித் ராம்ஜிபாய் மகலாவை கட்சி நிறுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story