தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை


தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை
x

மணப்பாடு பகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி பிரசாரத்திற்கு சென்றபோது, வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 54 பறக்கும் படை குழுக்கள், 54 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 6 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவினர் தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு பகுதியில் தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி பிரசாரத்திற்கு சென்றபோது, அவரது பிரசார வாகனம் மற்றும் கனிமொழியின் பைகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனைக்கு கனிமொழி முழுமையாக ஒத்துழைத்தார். அவரது பிரசார வாகனத்தில் பணமோ, பொருட்களோ எதுவும் இல்லை. தீவிர சோதனைக்கு பிறகு தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story