இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம்: போட்டி நடுவராக பணியாற்ற உள்ள ஆன்டி பைகிராப்ட்


இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம்: போட்டி நடுவராக பணியாற்ற உள்ள ஆன்டி பைகிராப்ட்
x

image courtesy: ICC

தினத்தந்தி 21 Sept 2025 5:30 AM IST (Updated: 21 Sept 2025 5:31 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேச அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இந்நிலையில், சூப்பர் 4 சுற்று நேற்று தொடங்கியது. சூப்பர் 4 சுற்றில் இன்று நடக்கும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. அதே உத்வேகத்தை தொடர இந்திய அணி முயற்சிக்கும்.

லீக் சுற்றில் இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்துக்கு, போட்டி நடுவராக ஆன்டி பைகிராப்ட் (ஜிம்பாப்வே) பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story