இலங்கை - பாகிஸ்தான் கடைசி டி20: டாஸ் போடுவதில் தாமதம்

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது போட்டி மழையால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கொழும்பு,
டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7 முதல் மார்ச்.8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன. இதற்கிடையில், பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ளது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது போட்டி மழையால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இருப்பினும் இன்றும் போட்டி நடைபெறும் தம்புலாவில் மழை பெய்து வருகிறது. இதனால் இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






