மகளிர் பிரீமியர் லீக்: வீராங்கனைகள் ஏலம் எப்போது தெரியுமா..?

இறுதி ஏலப்பட்டியலில் மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
image courtesy:twitter/@wplt20
image courtesy:twitter/@wplt20
Published on

புதுடெல்லி,

5 அணிகள் பங்கேற்கும் 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் டெல்லியில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இறுதி ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

இதில் இருந்து 73 வீராங்கனைகள் ஏலத்தில் எடுக்கப்பட இருக்கிறார்கள். உலகக்கோப்பை போட்டியில் தொடர்நாயகி விருது பெற்ற ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, ஹர்லீன் தியோல், பிரதிகா ராவல், நியூசிலாந்தின் சோபி டிவைன், இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன், ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி, தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் உள்ளிட்டோர் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com