தேசிய செய்திகள்

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு: இந்தியாவிடம் ரூ.3,750 கோடி கடன் கேட்கும் இலங்கை + "||" + Sri Lanka Seeks $500 Million Loan From India For Fuel Purchase: Report

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு: இந்தியாவிடம் ரூ.3,750 கோடி கடன் கேட்கும் இலங்கை

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு: இந்தியாவிடம் ரூ.3,750 கோடி கடன் கேட்கும் இலங்கை
கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவிடம், இலங்கை ரூ.3,750 கோடி கடன் கேட்டுள்ளது.
புதுடெல்லி, 

இலங்கையில் கொரோனா காரணமாக சுற்றுலா துறை வருமானம் சரிந்து விட்டதால், அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து விட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.6 சதவீதம் குறைந்து விட்டது. அதே சமயத்தில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், அதன் இறக்குமதிக்கு செலவிடும் தொகை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 41 சதவீதம் அதிகரித்து விட்டது. கச்சா எண்ணெய் செலவினத்துக்காக 2 அரசு வங்கிகளிடம் இலங்கை பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் ரூ.24 ஆயிரத்து 750 கோடி கடன் பட்டுள்ளது.

இந்த பின்னணியில், கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவிடம் இலங்கை ரூ.3 ஆயிரத்து 750 கோடி கடன் கேட்டுள்ளது. இதற்காக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்திடம் பேசி வருவதாக எண்ணெய் நிறுவன தலைவர் சுமித் விஜேசிங்கே தெரிவித்தார். இந்த கடன் ஒப்பந்தத்தில், இருநாட்டு எரிசக்தி செயலாளர்களும் விரைவில் கையெழுத்திடுவார்கள் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. எரிபொருள் கொள்முதல்: இந்தியாவிடம் கடன் உதவி கோரும் இலங்கை..!
கொரோனா பெருந்தொற்று தாக்கத்தால் இலங்கை கடுமையான அந்நிய செலவாணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
2. தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு: உலக வங்கி பாராட்டு
கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகத்தில் சர்வதேச அளவில் பங்காற்றிய இந்தியாவுக்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
3. தலீபான்களுடன் பேச்சுவார்த்தை: ரஷியா அழைப்பை ஏற்ற இந்தியா
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலீபான்களும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
4. துணை ஜனாதிபதியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு- இந்தியா நிராகரிப்பு
துணை ஜனாதிபதியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
5. தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்குள் நுழையுமா இந்திய அணி ?
முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.