5 மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணிக்கு தயாரான ஆம் ஆத்மி: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை


5 மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணிக்கு தயாரான ஆம் ஆத்மி: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
x

டெல்லி, பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் பிரிவுகள் ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிட உள்ளன.

புதுடெல்லி,

விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா கூட்டணி' என்ற பெயரில் மாபெரும் கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இந்த கூட்டணியில் காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் அங்கம் வகிக்கின்றன. இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து இவ்விரு கட்சிகளும் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தின.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. டெல்லி, பஞ்சாப், அரியானா, கோவா, குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இப்போது வரை, நேர்மறையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இரு மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் பிரிவுகள் ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிடும். அடுத்த கூட்டத்தில், தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்று அவர் கூறினார்.


Next Story