நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி படுகொலை; டிரைவர் கைது


நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி படுகொலை; டிரைவர் கைது
x

சிக்பள்ளாப்பூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த லாரி டிரைவர் போலீசில் சரணடைந்தார்.

:சிக்பள்ளாப்பூர்

சிக்பள்ளாப்பூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த லாரி டிரைவர் போலீசில் சரணடைந்தார்.

மனைவி குத்தி கொலை

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூரை அடுத்த அலகாபுராவை சேர்ந்தவர் அஞ்சும் கான். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அஞ்சும்கான் வேலைக்கு சென்ற பின்னர் சகானாஜ் வீட்டில் தனியாக இருந்தார். இதனால் அஞ்சும்கானுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அஞ்சும்கான் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் அஞ்சும்கான் தனது மனைவியிடம் வெளியே செல்லலாம் என்று அழைத்துள்ளார். இதை ஏற்று சகானாஜூம் கணவருடன் சென்றார்.

கவுரிபிதனூர் புறநகர் பகுதியில் சென்றபோது, கணவன், மனைவிக்கு இடையே கள்ளத்தொடர்பு காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது அஞ்சும்கான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நடுரோட்டில் வைத்து தனது மனைவி சகானாஜை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த சகானாஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து உடலை அங்கேயே போட்டுவிட்டு, தப்பியோடிய அஞ்சும்கான், கவுரிபிதனூர் போலீசில் சென்று சரணடைந்தார். அப்போது போலீசார் அஞ்சும்கானிடம் விசாரணை நடத்தினர்.

டிரைவர் கைது

விசாரணையில் அஞ்சும்கான் தனது மனைவி சகானாஜின் நடத்தையில் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் அடிக்கடி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்தி ெகான்றதாக கூறியுள்ளார். இதையடுத்து அஞ்சும்கானை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சகானாஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் இந்த கொலை மஞ்சேனஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்ததாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மஞ்சேனஹள்ளி போலீசிடம் ஒப்படைத்தனர். மஞ்சேனஹள்ளி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story