3வது நாளில் விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை


3வது நாளில் விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 15 Feb 2024 1:50 AM GMT (Updated: 15 Feb 2024 1:53 AM GMT)

விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

சண்டிகார்,

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லையை முற்றுகையிட்டு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் மத்திய மந்திரிகள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில் பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


Next Story