சேலத்தில் நடைபெற இருந்த தி.மு.க. இளைஞரணி மாநாடு ஒத்திவைப்பு


சேலத்தில் நடைபெற இருந்த தி.மு.க. இளைஞரணி மாநாடு ஒத்திவைப்பு
x

மழை காரணமாக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்,

சேலத்தில் வரும் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி 17-ந்தேதி நடைபெற இருந்த தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு, வரும் 24-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story