செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு


செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.

அதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மழை அளவு குறைவாக உள்ளதால், கல்வி நிலையங்கள் இன்று வழக்கம்போல் செயல்படும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.




Next Story