சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

கோப்புப்படம்

சென்னை எழும்பூரில் இருந்து நாளை மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.

சென்னை,

பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி மற்றும் கோவை - சென்னை சென்டிரல் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரியிலிருந்து இன்று (4-ந்தேதி) இரவு 8.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06041) நாளை காலை 9.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (5-ந்தேதி) மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06042) மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

இதேபோல, கோவையிலிருந்து இன்று (4-ந்தேதி) இரவு 11.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06043) மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாளை (5-ந்தேதி) காலை 10.20 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06044) அதேநாள் இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடையும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story