கோவை சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கோவை சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 25 ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

கோவை,

பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழ்நாடு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்துகிறார். பொள்ளாச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவை விமான நிலையம் புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கோவை சென்றடைந்தார்.

கோவை சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின்னர் பொள்ளாச்சியில் நடைபெறும் விழாவை தொடங்கி வைப்பதற்காக பொள்ளாச்சி புறப்பட்டார்.

ஆச்சிப்பட்டியில் நடைபெறும் விழாவில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 509 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவுற்றுள்ள திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதேபோல், 416 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.


Next Story