தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்து விட்டது: எடப்பாடி பழனிசாமி


தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்து விட்டது: எடப்பாடி பழனிசாமி
x

இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க.தான் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்து விட்டது.அ.தி.மு.க. கூட்டணி பற்றி தி.மு.க. ஏன் கவலைப்பட வேண்டும்? பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகும் கள்ளக் கூட்டணி என ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். யாருடனும் கள்ளக் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் அ.தி.மு.க.விற்கு இல்லை.

தி.மு.க.வில் ஸ்டாலின் குடும்பத்தினரை தவிர வேறு யாராவது பதவிக்கு வர முடியுமா? இந்தியாவிலேயே ஜனநாயகத்துடன் இயங்கும் கட்சி அ.தி.மு.கதான். அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை தி.மு.க. ஆட்சியில் உயர்ந்துவிட்டன. கொரோனா காலத்தில் கூட அதிமுக ஆட்சியில் விலை வாசி உயராமல் பார்த்துக் கொண்டோம்" இவ்வாறு அவர் பேசினார்.


Next Story