ரேஷன் கடைகளில் காதி, பனை வெல்லம் விற்பனைக்கு ஊக்கத்தொகை - தமிழக அரசு அறிவிப்பு


ரேஷன் கடைகளில் காதி, பனை வெல்லம் விற்பனைக்கு ஊக்கத்தொகை - தமிழக அரசு அறிவிப்பு
x

காதி பொருட்கள், பனை வெல்லம் போன்ற கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய ரேஷன் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காதி பொருட்கள், அரசு உப்பு, பனைவெல்லம் விற்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சில நிபந்தனைகளுடன் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் எனவும், கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் எனவும், நகர்ப்புற ரேஷன் கடைகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பூர்த்தி செய்யும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு, அம்மாதம் செலுத்தப்படும் விற்பனை தொகையில் ஒரு சதவீதம் ஊக்கத்தொகையாக கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story