தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை


தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
x

சென்னை, கோவை, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பிறநாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பினர் இந்தியாவில் ஊடுருவல் செய்துள்ளனரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை ஆலாந்துறை ஆர்.ஜி.நகரில் ரஞ்சித், காளப்பட்டியில் உள்ள முருகன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.


Next Story