மக்களவைத் தேர்தலில் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிடும் - பொதுக்குழுவில் முடிவு


மக்களவைத் தேர்தலில் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிடும் - பொதுக்குழுவில் முடிவு
x

மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியில்லை என பா.ம.க. திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை பணிகளில் இறங்கி இருக்கின்றன. இந்த நிலையில், பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட பா.ம.க. முடிவு செய்துள்ளது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியில்லை என பா.ம.க. திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பொதுக்குழுவிவில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், பா.ம.க. தொண்டர்கள், நிர்வாகிகளின் விருப்பப்படி தனித்துப் போட்டியிட இப்போது நாம் தயாராக இல்லை. கூட்டணி அமைத்தே பா.ம.க. போட்டியிடும். மாநில நலன், தேசிய நலன், மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும். மக்களவை தேர்தலில் குறைந்தது 7 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். 12 தொகுதிகளை அடையாளம் கண்டு பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story