திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை


திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
x

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திண்டுக்கல்.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழக பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது, என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்டத்தின் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நாளை சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக் கூடாது என்றும் தனியார் பள்ளிகள் மாவட்டக்கல்வி அலுவலர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story