ஐ.பி.எல்; சென்னைக்கு எதிராக வெற்றி...ஆனாலும் ரிஷப் பண்ட்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் - காரணம் என்ன..?


ஐ.பி.எல்; சென்னைக்கு எதிராக வெற்றி...ஆனாலும் ரிஷப் பண்ட்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் - காரணம் என்ன..?
x

Image Courtesy: @DelhiCapitals

தினத்தந்தி 1 April 2024 3:29 AM GMT (Updated: 1 April 2024 5:04 AM GMT)

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றது.

விசாகப்பட்டினம்,

ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் வார்னர் 52 ரன், பண்ட் 51 ரன் எடுத்தனர். இதையடுத்து 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றிருந்தாலும் குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக இந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதல் முறையாக ஈடுபட்டுள்ளதால், அந்த அணியின் கேப்டன் பண்ட்-க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதற்கு முன் சென்னைக்கு எதிரான போட்டியில் குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story