திருமாவளவனிடம் நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி..!

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனிடம் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.

Update: 2023-09-27 06:45 GMT

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வைரஸ் காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார்.

இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக 3-வது நாளாக மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவனிடம், தொலைபேசி மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். மருத்துவமனையில் இருந்து திருமாவளவன் இன்று வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்