
"ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாட்டப்படுவதை ஒட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். ஜனநாயகத்தை திருட முடியாத, வாக்குகள் மதிக்கப்படும் தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்
உண்மையான சுதந்திரம் என்பது மதவெறியை நிராகரித்தல், பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களைப் பாதுகாத்தல் என்பதாகும். இதன் பொருள் நமது சுதந்திரப் போராளிகள் கற்பனை செய்த லட்சியங்களை நிலைநிறுத்துவதாகும், இதன் மூலம் ஒவ்வொரு நபரும் சமத்துவம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழ முடியும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






