
“ஆபரேஷன் சிந்தூர்” - உத்தரபிரதேசத்தில் “ரெட் அலர்ட்”
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் குறிவைத்து நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் முழுவதும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேச காவல்துறையின் எக்ஸ் வலைதள பதிவின்படி, அனைத்து களப் பிரிவுகளும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, முக்கிய நிறுவல்களைச் சுற்றி பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதி செய்ய உ.பி. காவல்துறை விழிப்புடன், ஆயுதம் ஏந்தியதாகவும், முழுமையாகத் தயாராகவும் உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






