போர் பதற்றம் எதிரொலி.. 9 விமான நிலையங்கள் வரும் 10... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்"  - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
Daily Thanthi 2025-05-07 06:14:31.0
t-max-icont-min-icon

போர் பதற்றம் எதிரொலி.. 9 விமான நிலையங்கள் வரும் 10 ஆம் தேதி காலை வரை மூடல்

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இன்று மாலை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டது.

இந்நிலையில் போர் பதற்றம் எதிரொலியாக ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஞ்ச், ஜாம்நகர், சண்டிகர், ராஜ்கோட் ஆகிய 9 விமான நிலையங்கள் வரும் 10 ஆம் தேதி காலை 5:30 மணி வரை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1 More update

Next Story