மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.3,000 கோடி விடுவிப்பு


மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.3,000 கோடி விடுவிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2025 12:37 PM IST (Updated: 6 Aug 2025 3:33 PM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.8,445 கோடி நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது.

சென்னை,

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு பாதைகள் அமைக்கும் பணி நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் 2028-ல் முடித்து, மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரெயில்கள் உட்பட மொத்தம் 138 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில்களை நிறுத்தி பராமரிக்க மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதுபோல, 3-வது பணிமனை சோழிங்கநல்லூர் - சிறுசேரி இடையே 30 ஏக்கரில் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 2025-26ம் ஆண்டில் மத்திய அரசு ரூ.3,000 கோடி நிதி விடுத்துள்ளதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.8,445 கோடி நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதில், ரூ.3,000 கோடி ஒதுக்கீடு என மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

1 More update

Next Story