பீகார்: வந்தே பாரத் ரெயில் மோதி 4 பேர் பலி


பீகார்: வந்தே பாரத் ரெயில் மோதி 4 பேர் பலி
x
தினத்தந்தி 3 Oct 2025 4:13 PM IST (Updated: 3 Oct 2025 6:04 PM IST)
t-max-icont-min-icon

இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாட்னா,

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து பீகாரின் தலைநகர் பாட்னாவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வந்தே பாரத் ரெயில் நேற்று இரவு கோரக்பூரில் இருந்து புறப்பட்டது. ரெயில் இன்று அதிகாலை 4 மணியளவில் பீகாரின் பூர்னியா மாவட்டம் ஜக்பனி - கதிஹர் ரெயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் வேகமாக சென்றுகொண்டிருந்தது.

அப்போது, ரெயில் தண்டவாளத்தை 5 பேர் கடக்க முயன்றனர். அவர்கள் மீது அதிவேகமாக வந்த வந்தே பாரத் ரெயில் மோதியது. இதில் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story