பீகார் தேர்தலில் போட்டியிடும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா...!


பீகார் தேர்தலில் போட்டியிடும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா...!
x

பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக இடையேயான ஆளும் கூட்டணியில் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். அதேவேளை, எதிர்க்கட்சிகளாக உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அறிவித்துள்ளது. ஜார்க்கண்ட்டில் ஆளும் கட்சியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளது. அக்கட்சியின் தலைவராகவும், மாநில முதல்-மந்திரியாகவும் ஹேமந்த் சோரன் செயல்பட்டு வருகிறார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி பீகாரில் 6 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். இந்த 6 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 11ம் தேதி (2ம் கட்ட தேர்தல்) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தெரிவித்துள்ளது.

1 More update

Next Story