என்ஜினீயரிங் கல்லூரி மாணவி மாயம்


என்ஜினீயரிங் கல்லூரி மாணவி மாயம்
x

புதுவையில் கல்லூரிக்கு சென்ற என்ஜினீயரிங் மாணவி மாயமானார்.

புதுச்சேரி

புதுவை சோலைநகர் காமராஜ் வீதியை சேர்ந்தவர் முனுசாமி. அவரது மகள் கோகிலவாணி (வயது 19). இவர் லாஸ்பேட்டை மகளிர் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று கல்லூரிக்கு சென்ற இவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை உறவினர், தோழிகள் வீடுகளில் தேடினர். இருப்பினும் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோகிலவாணியின் தாய் அனிதா கொடுத்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story