புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு


புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு
x

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்சினி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்சினி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9ஆம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story