பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது


பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது
x

புதுவையில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி கோவிந்தசாலை பாரதிபுரம் மெயின்ரோட்டில் ஒருவர் கத்தியுடன் நின்று கொண்டு பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தார். அந்த வழியாக ரோந்து சென்ற பெரியகடை போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரவுடி பரத் (வயது34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கத்தியையும் பறிமுதல் செய்தனர்.


Next Story