நெல்லையில் கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாநகர பகுதியில் 2 பேர் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவை சேர்ந்த பாக்கியசாமி மகன் பாலு (வயது 33) மற்றும் திருநெல்வேலி, பெருமாள்புரம், தியாகராஜநகர், நடுத்தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பாலசுப்பிரமணியன்(26) ஆகிய 2 பேர் திருநெல்வேலி மாநகர பகுதியில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து மேற்சொன்ன 2 பேர், திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) வினோத் சாந்தாராம், போலீஸ் உதவி கமிஷனர் (பாளையங்கோட்டை சரகம்) சுரேஷ், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி, இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.






