பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை


பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
x

சென்னை அண்ணாசாலை பகுதியில் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் நாளை (10.5.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அதன்படி அண்ணாசாலை பகுதியில் ஒயிட்ஸ் சாலை ஒரு பகுதி, அண்ணாசாலை ஒரு பகுதி, ஐ.சி.ஐ.சிஐ.வங்கி, ஐ.டி.சி.ஹோட்டல், வாசன்அவென்யு, ஆனந்தவிகடன், அண்ணாசாலை ஒரு பகுதி, ரஹேஜாடவர், ஜி.பி.சாலை, சத்தியமூர்த்திபவன், இ.பி.காம்ப்ளெக்ஸ், இ.பி.லிங்க் சாலை, கிளப்ஹவுஸ், சிட்டிடவர், பட்டுலா சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யு, கலைக்கல்லூரி, பின்னி சாலை, வி.சி.சாலை, ஹோட்டல் காஞ்சி, இந்தியன் வங்கி, டி.எல்.எப்., பாகன் பில்டிங், எத்திராஜ் கல்லூரி, சக்தி டவர்ஸ், சிட்டி வங்கி, மதுரா வங்கி, IOB வங்கி, ராணிமெய்யம்மை ஹாஸ்டல், ஏர்இந்தியா, அப்போலோ மருத்துவமனை, மார்ஷல் சாலை, மான்டியத் சாலை, கனரா வங்கி, கன்னிமாரா ஹோட்டல், டேட்டா சென்டர், தாஜ் ஹோட்டல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story